கடந்த ஆண்டு துபாயில், குறைந்த, நடுத்தர மற்றும் ஆடம்பரம் போன்ற அனைத்து வகையான வீடுகளுக்கான வாடகை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் குறைந்த விலையில் வாடகை தேடுவோரின் விகிதம் உயர்ந்துள்ளது. அவர்கள் டெய்ரா மற்றும் பர் துபாய் போன்ற பகுதிகள் வசதியானவை மற்றும் பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்குகின்றன என்று Bayut மூலம் வெளியான ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வளவு அதிகரிப்பு
குறைந்த விலையில் வாடகை குடியிருப்புகள் 48 சதவீதம் வரை வாடகையை உயர்த்தியுள்ளன, குறிப்பாக இரண்டு குடியிருப்பு கொண்ட வீடுகள் தேராவில் கடும் உயர்வை சந்தித்துள்ளன. நடுத்தர விலை குடியிருப்புகள் 41 சதவீதம் வரை உயர்ந்துள்ளன மேலும் ஆடம்பர விலை குடியிருப்புகள் 5 முதல் 25 சதவீதம் வரையும் உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லாக்கள் வாடகையும் உயர்வு
வில்லா வாடகைகளும் ஏறப்படுகின்றன குறிப்பாக டாமாக் ஹில்ஸ் 2 மற்றும் மிர்டிஃப் போன்ற பகுதிகளில் வில்லாக்களுக்கான தேவையும் அதிகரித்தது, அங்கு வாடகை 44 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏன் அதிகரிப்பு?
துபாயின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது 2025 ஆம் ஆண்டிற்குள் நான்கு மில்லியனை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வீட்டுவசதிக்கான அதிக தேவைக்கு வழிவகுக்கிறது மேலும், பலர் துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
முதலீட்டில் அதிக வருவாய்
சில பகுதிகள் முதலீட்டாளர்களுக்கு அதிக வாடகை மூலம் சிறந்த வருவாயை ஈட்டித்தருகின்றனர் குறிப்பாக குறைந்த விலையில் துபாய் Investments Park, டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற இடங்களும், நடுத்தர வாடகை அளவுகளில் லிவிங் லெஜண்ட்ஸ், மோட்டார் சிட்டி போன்ற இடங்களும், ஆடம்பர வாடகை அளவுகோள்களில் அல் சுஃபூஹ், reen Community போன்ற இடங்களும் முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாயை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
