உலகளாவிய அளவில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் நோக்கில், துபாயின் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ‘எர்த் துபாய் விருது’ என்ற மாபெரும் விருதை அறிவித்துள்ளார். இந்த விருது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான உலகிலேயே மிகவும் பெரிய விருதுகளில் ஒன்றாகும்.
விருதின் நோக்கம்
துபாயின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க உதவுபவர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
கதை சொல்லுதல், ஆவணப்படுத்துதல் மற்றும் படைப்பாற்றல் மூலம் எமிராட்டி அடையாளத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
விருது விவரங்கள்:
மொத்த பரிசு தொகை: AED 5 மில்லியனுக்கு மேல்
மாபெரும் பரிசு: AED 1 மில்லியனுக்கு மேல்
மற்ற பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு தலா AED 500,000 வழங்கப்படும்.
இரண்டு முக்கிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
சமூகப் பிரிவு (Community category)
அரசு மற்றும் தனியார் துறைப் பிரிவு (Government and private sector category)
சமூகப் பிரிவின் கீழ் உள்ள சில விருதுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
- சிறந்த படைப்பு கதை சொல்லல்
- சிறந்த குடும்பப் பாரம்பரியக் கதை
- சிறந்த துபாய் குடியிருப்பாளரின் கதை
- சிறந்த வாய்மொழி வரலாற்றை ஆவணப்படுத்தல்
- சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட சிறந்த கதை
எப்படி விண்ணப்பிப்பது?
- துபாய் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் இந்த விருதில் பங்கேற்கலாம்.
- விண்ணப்பங்களை ‘எர்த் துபாய்’ இணையதளம் (https://erthdubai.ae) மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்கப்பட்ட ‘எர்த் துபாய்’ செயலி (Apple Store மற்றும் Google Play-ல் கிடைக்கும்) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 15, 2026
- வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கௌரவிக்கப்படுவார்கள்.
