🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

அமீரகத்தில் வியாழன் வரை மூடுபனி தொடரும்;   வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு; NCM எச்சரிக்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் மூடுபனி மற்றும் மேகமூட்டமான வானிலை வரும் வியாழக்கிழமை வரை நீடிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலையும் படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (பிப்.23):

நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் விடியற்காலையில் அடர்த்தியான மூடுபனி  அல்லது பனிமூட்டம்  நிலவக்கூடும். 

செவ்வாய்க்கிழமை (பிப்.24):

வானம் பொதுவாகத் தெளிவாகவும் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை உயர்வு நிலவும்.

புதன்கிழமை (பிப்.25):

காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 35 கி.மீ வரை வீசக்கூடும். கடலோரப் பகுதிகளில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை (பிப்.26):

இரவில் ஈரப்பதம் நீடிப்பதோடு, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் ஆங்காங்கே மூடுபனி காணப்படும்.

அரபிக்கடல் பகுதியில் அலைகள் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும். ஓமன் கடல் அமைதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்களின் போது சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறும், மூடுபனி நேரங்களில் வேகத்தைக் குறைத்து வாகனங்களை இயக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 


கடந்த பிப்.4 அன்று வெளியான வானிலை அறிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை, மேகமூட்டம் மற்றும் கடலில் சீற்றமான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

TAGGED: